Wednesday 2 April 2014

2.ஆப்பு கொடுத்த மீனா

மெட்ராசுக்கு வந்த மீனா எப்படி இருப்பாளோ என்று நான் தின்க் பண்ணி கொண்டிருந்தேன். மீனா என்று சொன்னவுடன் எனக்கு நடிகை மீனாதான் மைன்ட்ல வருவாங்க. அழகான கண். அந்த கண்களை பார்த்து கொண்டே இருக்கலாம். நேர்த்தியான மூக்கு, ஆப்பில் கன்னம், செர்ரி பழம் உதடு, சுண்டீ வீட்டா எலுமிச்சை பழம் நிறம். மொத்ததுல சூப்பர் பிகர். கணபதி ஐயர் மனைவிக்குள்ள எல்லா பொருத்தமும் மீனாவுக்கு உண்டு.

ரெட்ட ஜடை போட்டுக்கினு அப்படியே நடந்து வரும்போது என்னுடைய ஹார்ட் ரெம்ப ஃபாஸ்டா அடிக்கும். ஒரு மயில் மாதிரி இருப்பா அவ. அவ தாவனி கட்டிக்கிட்டு நடக்கும் போது என்னுடைய நாடி நரம்பு எல்லாம் அடங்கி தண்ணியில பதத்து போன பக்கோடா மாதிரி ஸாஃப்டா ஆயிடும். ஊருல இருக்கும் போது நாந்தே பசங்க கூட்டத்துல பாக்குறதுக்கு நல்ல இருப்பேன். அதனால, அவ என்ன பாத்து லைட்டா சிரிப்பா. அப்போ மனசுக்குள்ள சிட்டுக்குறுவி எல்லாம் பறக்கும்.

மேட்ராசுக்கு வந்த உடனே நானும் மீனாவ பாக்குறதுக்கு அவ காலேஜுக்கு போனேன். இம்மா பெரிய காலேஜு அது. எம்புட்டு பிகருக. எல்லாரும் ஜீன்ஸ் டீ சர்ட் போட்டுகினு இருந்தாய்ங்க. மீனாவும் ஜீன்ஸ் டீசர்ட் போட்டுகினு நடந்து வந்தா. அழகோ அழகு. என்ன பாத்ததும் என்ன சொல்லுவாளோனு நானும் வெயிட் செய்தேன். ஆனா அவ என்ன பார்த்தும் பார்க்காதது போல் நடந்து போனா. அதுதான் மீனா எனக்கு கொடுத்த முதல் ஆப்பு. அப்பவே நான் முழிச்சிருக்கனும்.. ஆனா...

- ஆப்புகள் தொடரும்

No comments:

Post a Comment